Price: ₹70
Pages: 172
ISBN: -----
தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன.இலக்கியச்சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு, உள்ளிட்ட எண்ணற்ற இலக்கிய மரியாதையைப் பெற்றவர்.அகில இந்திய இலக்கியப் பரிசான சாகித்திய அகாதெமி விருது, பாரதிய பாஷா பரிட்சத் விருதுகளைப் பெற்று இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தவர். அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கச் சுவாரஸ்யம், மனித நேயத்தை உன்னதப் படுத்தும் இலட்சியம் - இவை இவரது எழுத்தின் சிறப்பு.