Price: ₹110
Pages: 320
ISBN: ----
இரண்டாவது முறை குயில் கூவும்போது ஸ்ரீராமுலு செட்டியார் படுக்கை விட்டு எழுந்து விட்டார். கட்டிலுக்கு அருகே உள்ள மேஜையைத் தடவி டேபிள் லேம்ப் சுவிட்ச் போட்டார். டைம்பீஸ் நாலே முக்கால் என்று காட்டியது. படுக்கையில் சம்மணமிட்டு உட்கார்ந்தார். கண்கள் மூடினார். நெஞ்சருகே இரண்டு கைகளையும் குவித்தார். மனசுக்குள்ளே எம்பெருமானை நோக்கி வணக்கம் சொன்னார். மனசுள் பசு தோன்றியது. கழுத்து மணி அசைத்தது. கால் சதங்கை நகர்த்தியது