Price: ₹145
Pages: 274
ISBN: ----
இந்திய சர்க்கரை நோய்ச் சங்கத்தின் பொதுமக்கள் பகுதி 1991ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டு, சர்க்கரை நோய் பற்றிய உண்மையான அறிவியற் கருத்துக்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதின் பொருட்டு, உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் பெற்றோர்கள் நினைவு தினம் ஆகிய இரு நாள்களில் தொடர்ந்து 24 ஆண்டுகளாக சுமார் 50 பட்டிமன்றங்கள், சுழலும் சொற்போர்கள் மற்றும் வழக்காடு மன்றங்களும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளை நிரந்தரமாகப் பதிவு செய்து என்றென்றும், மக்களுக்குப் பயன்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த தொகுப்பின் நோக்கம். ஒன்பது நிகழ்வுகள் தொகுத்து, பேச்சு நடையில் இருந்த தமிழை முடிந்த வரை உரைநடைக்கு மாற்றி கருத்துக்கள் அப்படியே சொல்லப்பட்டு உள்ளன. இதுவரை நேரில் மட்டும் கேட்டுக் களித்த செய்திகளை நீங்கள் நிறுத்தி நிதானமாகப் படித்து மனதில் இருத்திக்கொள்ள வசதியாக இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.