Price: ₹15
Pages: 24
ISBN: ----
1909 இல் லண்டன் இந்தியா ஹௌஸிலிருந்து இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளை திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கர் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரக்காரர்களுடன் நீண்ட விவாதத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில், இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும் பத்து நாட்களில் தனது தாய் மொழியில் எழுதிய கொள்கைச் சாசனம் இந்நூல். முதல் வாசிப்பில் நம் ஏற்றுக்கொள்ள முடியாத பிற்போக்குத்தனமாக இந்நூலின் கருத்துக்கள் தோன்றக்கூடும். சுயநலம் விட்டு, அனுபவப் பின்னணியில் தனித் தனியாகச் சிந்திக்கும்போது சரியே என ஏற்கத் தூண்டும். இளைய தலைமுறையினருக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும், மனிதாபிமானப் போராளிகளுக்கும், ஏன் புரட்சியாளர்களுக்கு கூட இந்நூல் உதவக்கூடும்.