Price: ₹60
Pages: 129
ISBN: 9788123404042
பண்டைக் காலத்தில் தமிழ் பயிற்சி இலக்கணம் கற்பித்தலுடன் தொடங்குகிறது. அக்காலத்தில் இன்றுள்ளது போல் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருந்ததில்லை. ஆசானையடுத்து உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றனர். இலக்கணப் பயிற்சியும், நூற்பாக்களை மனப்பாடம் செய்தலும், ஒப்பித்தலும் கல்வி முறைகளாக இருந்தன. கவி பாடுவதும் வரைதலும் முன்குறித்த சிறப்பான பணிகளாக அன்று கருதப்பட்டன. காலமாற்றத்திற்கேற்ப இலக்கணமும் இலக்கணப் பயிற்சியும் மாறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலக்கணம் வாழ்கைக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். இதனை மனத்தில் கொண்டு முனைவர் சௌ.மதார்மைதீன் பயன்முறைத் தமிழ் எனும் நூலை எழுதியுள்ளார்.