Price: ₹150
Pages: 339
ISBN: 9788189780555
மனிதனைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைப் பற்றிப் பல கோணங்களில் படித்திருக்கலாம், பார்த்திருக்கலாம். மனிதர்கள் மேற்கொள்ளும் பல அக்கிரமங்களையும், கொடூரங்களையம் பற்றிப் படித்த மனதில் தோன்றும் கேள்வி -'ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்? என்பதாகத்தான் இருக்கும். மனிதனுக்குள்ளே, அவனுடைய மூளையில் ஒரு பாதாள அறையில் அமர்ந்திருக்கும் கொடூரமான மிருகம் Tumor-ஐவிட ரொம்ப சிக்கலானது. சிலரிடம் அந்த மிருகம் வெறுமனே அமர்ந்துவிட்டு மரிப்பதும் உண்டு. சிலரிடம் அவ்வப்போது வெளிப்பட்டு தன் கோரப் பற்களைக் காட்டி லேசாக உறுமுகிறது. சிலரிடம் அது அரக்கத்தனமாக விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிப்பு செய்கிறது. அப்போது மனிதன் முழுசாக அதன் கைப்பாவை ஆகிவிடுகிறான்.