Price: ₹110
Pages: 211
ISBN: -----
ஒரு சமுதாயத்தின் அமைப்பையும் அதன் செயல்போக்கினையும் அறிந்து கொள்ள இலக்கியம் முக்கியமானது. இலக்கியம், கருத்தினை வெளிப்படுத்தும் கருவி என்பதை விட சமூகக் கட்டுபாட்டைக் காக்கும் கருவியாகவும் சமுதாயத்தின், மனிதமனத்தின், வரலாற்றின், உடலியலின் விளை பொருளாகவும் இருக்கிறது. மரபுப்போக்கில் வளர்ந்த தமிழ் இலக்கிய காலத்தில் மொழியுணர்வும் இனவுணர்வும் புறக்கணிப்பிற்கு உள்ளான சூழலில் பாரதியும் பாரதிதாசனும் இரண்டு எல்லைக்கற்களாக நின்று தமிழ் இளைஞர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை தமது இலக்கிய படைப்புகள் மூலம் உண்டாக்கினார்.