Price: ₹85
Pages: 206
ISBN: -----
'மாலை நேரக் கனவுகள்' கதையில் தாய் மகளின் வாழ்க்கைப் போராட்டத்துடன் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை உயிரோடு உலவ விட்டுள்ளார். 'நீயும் நானும் நினைத்தால்' கதையில் அண்ணன் தங்கை பாசத்துடன் கூடிய வாழ்க்கையுடன் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்....எத்தனை விதமான சம்பவங்கள். ஒரே மூச்சில் படித்துவிடத் தூண்டும் திடீர் திருப்பங்கள்... கதை படித்து முடிக்கும்போது, நல்ல சினிமா பார்த்த திருப்தி...'பிள்ளைக் கணியமுதே கண்ணம்மா' -வில், கதாநாயகி விலைமகள் மனோகரியின் தொழிலைக் குத்திக்காட்டிப் பேசும்போது பொங்கிவரும் ஆத்திரத்தை அடக்கி புத்துணர்ச்சியை நிரப்பும் பத்து வயது பெண் லட்டு. மனோகரி, லட்டு இடையே உள்ள நெருக்கம் படிப்பவரையும் நெகிழச் செய்கிறது.