Price: ₹180
Pages: 364
ISBN: 9788184760316
தமிழர்களின் அடையாளங்களில் மிக முக்கியமானவை வீரமும் காதலும்தான். தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படும் சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் கருப்பொருளே இந்த இரண்டு அம்சங்கள்தான். வீரம் செறிந்த பாடல்களை புறம் என்றும், காதல் கசியும் பாடல்களை அகம் என்றும் பிரித்தனர். கொல்லுகின்ற காளையின் கொம்புகளுக்கு அஞ்சும் ஆண்மகனை மறுபிறவியிலும் விரும்பமாட்டார்கள் பெண்கள் என்று கூறுகிறது சங்க இலக்கியம். சங்க இலக்கியத்தின் தாக்கம் இன்றைய நவீன இலக்கியங்களில் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த வரிசையில், பல வருடங்களுக்கு முன்பு கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்நாவலையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வீரம் உள்ள ஒருவரால்தான் நேர்மையாக வாழ முடியும் என்பதற்கு இந்நாவலின் நாயகன் நல்ல உதாரணம்.