Price: ₹40
Pages: 80
ISBN: 9788188048182
இப்புத்தகத்தை பற்றி Keywords தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளின் மூலம் இளம் நெஞ்சங்களில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களைப் பதிக்கிறார். இந்நூலைச் சிறுவர் சிறுமியர் படித்து மனத்தில், நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியோர்கள் இந்நூலை வாங்கிப் படித்துச் சிறுவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும்.நல்ல கதைகள் மனங்களைச் சிதைக்காமல், சீரிழிக்காமல், எல்லை தாண்டிச் செல்லாமல் எச்சரிக்கை செய்யும். இந்நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் எல்லாம் மனங்களைப் பக்குவப்படுத்தும் சிறந்த கதைகளே. இந்நூலுக்குப் பொதுமக்களின் ஆதரவு பெருமளவில் கிடைப்பதுடன் கல்வித் துறைகளும் இந்நூலை அறிவு வளர்ச்சிக்கு ஏற்றுக்கொள்ளும் எனப் பெரிதும் நம்புகிறோம்.