Price: ₹150
Pages: 309
ISBN: -----
கேட்கப்பட்டதா கேள்விகளுக்காய்ப் பூட்டிக்கிடக்கும் பூமி 'கணிப்பொறிகாளை வெறுக்கிறேன்,பாவம் அவைகளுக்குப் பதில் சொல்லத்தான் தெரியும்; கேள்வி கேட்கத் தெரியாது' என்றார் பப்லோ பிக்காசோ. உயிர்ப்புள்ளதே கேள்விகேட்கும் அல்லது கேள்வி கேட்பதே உயிர்ப்புறும். கேள்விகள் சாவிகள்:பூமியின் புதிர்களை வாழ்வின் ரகசியங்களை அவை திறக்கின்றன. கேட்கப்பட்ட கேள்விகளால் தன்னைத் திறந்து கொண்ட பிரபஞ்சம் கேட்கப்படாத கேள்விகளுக்காக ஆயிரம் கோடி ஆண்டுகளாய் அகலிகைக் கல்லாய்க் கிடக்கிறது அப்படியே. கேள்வியின் அடிவயிற்றில் வலித்துக்கொண்டே கிடக்கிறது. ஞானத்தின் முளை.