Price: ₹150
Pages: 152
ISBN: 8187642289
நாகரிகம் எப்போது தொன்றும்? வளமும் செழிப்பு மான வாழ்க்கை ஓரிடத்தில் நீண்ட நெடுங்காலத்திற்குத் தொடர்ந்து நிலைக்குமானால் அங்கே நாகரிகம் தோன்றும் பண்பாடு வளரும். எந்நேரமும் உயிரைக் கையில்பிடித்தபடி ஓடிக்கொண்டே இருந்தாலோ,மறுநாள் வாழ்க்கைக்கு எவ்வித உறுதிப்பாடும் இல்லையென்றாலோ அங்கே நாகரிகம் தோன்ற்றுவதில்லை. அம்மக்களின் வாழ்க்கை நிலையாமையில் உழன்று பதைப்புடனே நகரும்.அதனால்தான் நீடித்த நிலைத்த செழிப்பான வாழ்க்கைக்குக் கட்டியம் கூறியா ஆற்றங்கரையோரத்தில் நாகரிகங்கள் செழித்தன.பேராற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்த ஓருயிர்கள் நாம். இன்றைக்கு நம் வாழ்வு என்றைக்குமில்லாத முன்னேற்றங்களை விரைந்து அடைந்துவிட்டது. அது மேலும் மேலும் தன்னைப் புதுமைப்படுத்திக்கொண்டே,மேம்படுத்திக்கொண்டே செல்கிறது. நம் நாகரிகத்தின் உயர் விளைச்சல் என்று மாநகரகங்களைக் கூற வேண்டும்.